வெளிநாட்டு வைத்தியர்களை பதிவு செய்யக் கோரிக்கை!

[postlink] https://tamilkaraokez.blogspot.com/2012/07/blog-post_22.html[/postlink]

இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு வைத்தியர்கள் சுமார் 300 பேரினதும் விவரங்களைப் பதிவு செய்து ஒழுங்குபடுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சைக் கோரியுள்ளது. இலங்கையில் பணியாற்றும் வைத்தியர்கள் அனைவருமே இலங்கை மருத்துவச்சபையில் பதிவுசெய்துள்ளனர். ஆனால் இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு வைத்தியர்கள் அதாவது இந்தியாவைச் சேர்ந்த சுமார் 300 வைத்தியர்களும் இலங்கை மருத்துவச் சபையில் பதிவு செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதிகாரிகளின் தரம் பயிற்சி நிலைகள் என் பனபற்றிய உண்மைத் தரவுகள் எவையுமே தெரியாத நிலையிலேயே அவர்கள் இங்கு பணியாற்றுகின்றார்கள். சில வைத்தியர்கள் நிபுணர்கள் என்ற நிலையிலிருந்து இங்கு பணியாற்றுகின்றார்கள். அதன் உண் மைத் தன்மை தெரியவராமல் உள்ளது.
இங்கு வைத்தியராகப் பணியாற்றும் ஒருவர் என்ன நிலையிலிருந்து பணியாற்ற முற்படுகிறாரோ அந்த நிலையில் அல்லது சிறப்புத் துறையில் அவரது தகுதிபற்றி இங்கு அதற்கென உள்ள ஒவ்வொரு பிரிவு நிலை அதிகாரிகளாலும் உறுதிசெய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.
எனவே இந்தியாவிலிருந்து வந்துள்ள இந்த 300 வைத்தியர்களின் விவரங்களைப் பதிவு செய்து ஒழுங்கு படுத்துமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சைக் கோரி யுள்ளது. இலங்கைச் சட்டத்தின் சில பலவீனங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு வைத்தியர்கள் இங்கு பணி யாற்றுகின்றனர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamil Karaoke - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger